Tuesday 13 March 2018

நடுநிலை நல்லிணக்க நக்குண்ணி நாய்களென்று பதிவிடும் நாயகர்களே  !!

 நல்லிணக்கம் என்பதை நீங்கள் என்னவாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் ?

சோனகனும் தமிழனும் சம்மந்தம்பேசி கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி பிள்ளை பெறுவதென்றா நினைத்திருக்கிறீர்கள்?

கண்ட இடத்தில் ஒரு ஹலோ சொல்லி , கைகுலுக்கி கொள்வதும்.
எங்கோ ஒரு ஊரில் காணுமிடத்தில் இவன் என்னூரவன் என்று அருகில் வந்து ஏதும் தேவையா என கேட்டு உதவுவதும்.

பெரும்பான்மையிடத்தில் இக்கட்டில் மாட்டும்போது இவன் என்னூரவன் நான்  அறிந்தவன் என்று அவனுக்கு உதவுவதும் தானுங்கப்பா நல்லிணக்கம் .  இரு இனங்கள்களுக்கு இடையில் சாதாரண மனித மாண்பு உண்டாக வேண்டுமென்பதற்கே இத்தனை இழுபறி...

மனோகணேசனை வைத்து செய்கிறார்களாம் செருப்படி கொடுக்கிறார்களாம் . கொடுங்கள் அதற்காக யுத்தத்தில் பாதிக்கப்பட்ட அப்பாவி தமிழர்களை சோத்துக்கு வழியில்லாமல் கையேந்துபவர்களென்றா இழிவு படுத்துவீர்கள்? தமிழ்பெண்கள் வன்புணர்வுக்கு தூண்டும் வகையில் உடை உடுப்பவர்களென்று பொத்தம்பொதுவாகவா பேசுவீர்கள்? என்னதான் நல்லிணக்கம் பேசினாலும் எங்கள் நாடி நரம்புக்குள்ளும் ரோச குருதிதானய்யா  ஓடுகிறது .

மனோகணேசனை கண்டு கொள்ளும் உங்கள் கண்கள் கண்டிகலவரத்தை கண்டித்தும்   உங்களுக்கு ஆதரவாகவும் எழுதிய தமிழர்களை கண்டு கொள்ளாமல் போனதேனய்யாமார்களே?

உங்களுக்காக எழுதிய அதே மனம்தான் இப்போதுவலிக்கிறது.
அதெப்படி..இப்படியெல்லாம் எழுதுவது சரியில்லையென சொல்வதற்கு உங்களுக்குள் ஒருவருமில்லாமல் போவது?

 கண்டிகலவரம் ஒன்றை உணர்த்துகிறதாம்........
முஸ்லீம் , தமிழ் இரு இனமும் ஒன்றிணைந்து சிங்கள பேரினவாதத்திற்கு எதிராக போராடவேண்டிய கட்டாயத்தை உணர்ந்திருக்கிறார்களாம்.  இப்படியும்  ஒரு குறூப் குறி சொல்ல தொடங்கியிருக்கு.
 இன்னும் நாலு யுகம் கடந்தாலும் நாங்கள் சொல்லும் நல்லிணக்கம் வருமென்பதே சந்தேகம்... இதற்குள் கைகோர்த்தல் கவுறுதிரித்தல் என்ற காமடிகளைகேட்கும் போது கோவம்தான் வருகிறது .

அறிக்கை அரசியலிலேயே காலம் கடத்தும் அவதானிகளே ஐம்பது வருடங்கள் ஒன்றாக பழகியவனென்ற அனுபவத்தில் அறிதியிட்டு , சவால் விட்டு சொல்கிறேன்... இலங்கையில் இரு இனங்கள் ஒன்றுசேர்ந்து சிங்கள பெளத்த இனவாதத்துக்கு எதிராக போராடுவார்களென்பது கனவிலும் நடவாத காரியம்.

தங்கள் தங்கள் அபிலாஷைகளையும் , தேவைகளையும் தனித்து நின்றே போராடி அல்லது உடன்பட்டு போய் பெற்றுக்கொள்வார்கள்...

ஆக  இனிமேலாவது  We want meet under one umbrella என்ற கத்தாவையTalk காம  நான் சொல்லும் இந்த  நல்லிணக்கத்தையாவது ஏற்படுத்த முயற்சி செய்யுங்க..

#நம்மால இனியேலா. இரு பெத்தா  உன்னபத்தி நான் எழுதுறன்#

மார்ச்10 / 2018

No comments:

Post a Comment

.          சாரதியின் கதை. ========================= ஒரு மனிசன் கொஞ்சம் கலர் கம்மியா இருக்கிறதுமாய்யா அவ்வளவு பெரிய குற்றம்.? அதுக்காக இ...